நடைபெற்று முடிந்த 2025ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டி நிகழ்ச்சிகளில்
வலய மட்ட ரீதியாக எமது பாடசாலையிலிருந்து பங்குபற்றி வெற்றி பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு எமது பாடசாலையில் இடம்பெற்றது. குறித்த போட்டி நிகழ்வுகளுக்கு மாணவர்களை பயிற்சியளித்து நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கு ஊக்குவிப்புக்களையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.











